வருண முத்திரை
சிறப்புகள்:
இம்முத்திரை மழைக் கடவுளாம் வருண பகவானைக் குறிக்கும். நமது உடலில் 75 சதவிகிதம் நீர் இருக்கிறது. இம்முத்திரை உடலில் நீர்த்தன்மை குறையும் போது அதிகரிக்கச் செய்கிறது.
செய்முறை:
முதலில் தரையில் ஒரு யோகா பாய் விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும். அல்லது உங்கள் வசதிக்கேற்ப நாற்காலியிலும் அமரலாம்.
கண்களை மூடிக்கொள்வது சிறப்பு.
முதலில் பெருவிரல் நுனியும், சிறுவிரல் நுனியும் தொடும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இம்முத்திரைப் பயிற்சியில் விரல் நுனியில் அதிக அழுத்தம் கூடாது.
இரண்டு கைகளிலும் பயிற்சி செய்யலாம்.
படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு கைகளையும், முழங்கால் மீது வைத்துக் கொண்டும் செய்யலாம்.
இம்முத்திரைப் பயிற்சியின் போது மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட வேண்டும்.
கால வரையறை:
இந்த முத்திரையை தினமும் 15 முதல் 45 நிமிடங்கள் செய்வது நல்ல பலனைத் தரும்.
15 நிமிடங்கள் வீதம் மூன்று முறையாகவும் செய்யலாம்.
இம்முத்திரையை எந்த நேரமும், எந்த இடத்திலும் பயிற்சி செய்யலாம்.
பலன்கள்:
உடலின் நீர்ச்சத்தை சமப்படுத்தும்.
நீர்ச்சக்தியை மேம்படுத்தும் செல்கள், திசுக்கள், தசை நார்கள் ஆகியவற்றை புதுப்பிக்க உதவும்.
செரிமான சக்தியை அதிகரிக்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
முகம் பளபளப்பாக இருக்க உதவும்.
தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.
வாய், கண் உலர்ந்து போவதை தடுக்கும்.
உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்யும்.
இரத்தசோகை, தசைப்பிடிப்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
தீர்வுகள்:
இரத்தம், வயிறு, தோல், மூட்டு வலி, வாய் மற்றும் பக்கவாதம்.
SHARE WITH FRIENDS & FAMILY